தமிழ்நாடு
இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முடிவே இல்லையா?
![petrol - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/petrol.jpg)
சென்னையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் விலையேற்றத்திற்கு முடிவே இல்லையா என்று பொதுமக்கள் புலம்பும் நிலைக்கு தள்ளி உள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 இரண்டு காசுகள் உயர்ந்து உள்ளது. எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.58 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே நேரத்தில் டீசல் விலை 29 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.74 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் ரூபாய் 100ஐ நெருங்கி உள்ளது என்பதும் டீசல் ரூ.95ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதால் 100 ரூபாய்க்கும் கீழ் பெட்ரோல் விலை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை என்பதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டையுமே மத்திய அரசு குறைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பயனை பொதுமக்களுக்கு அளிக்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்வதாக அரசியல் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.