தமிழ்நாடு
ரூ.102ஐ நெருங்கிவிட்ட டீசல்: பெட்ரோல் விலையும் உச்சம்!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கையகப்படுத்தி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் பல மாதங்களாக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பு இல்லாமல் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது என்பதும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் முப்பது காசுகளுக்கும் மேலும் உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற ரீதியில் உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் பெட்ரோல் விலை 105 ரூபாயையும் டீசல் விலை 101 ரூபாயையும் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து புதிய உச்சத்தை பெட்ரோல் தொட்டு உள்ளது என்பதும் டீசல் விலையும் 102 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ரூ.105.74 என்ற விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ரூ.101.92 என்ற விலைக்கு ஒரு லிட்டர் டீசலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் அவதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.