வணிகம்

அட போங்க பாஸ்.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. மக்கள் அதிர்ச்சி!

Published

on

சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த மூன்று  நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 15 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்தது.

டீசல் விலை 31 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.26 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.04 காசுகளாக விற்கிறது.

அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version