தமிழ்நாடு

மீண்டும் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதாலும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதன் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சென்னையை பொருத்தவரை பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் அதேபோல் டீசல் விலை 95 ரூபாயை தாண்டி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனையடுத்து இன்று பெட்ரோல் விலை ரூ.100.01 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் டீசல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 95.31 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சென்னையில் மீண்டும் 100 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டியுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version