தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் முகத்தில் மனுவை தூக்கியெறிந்த திமுக தொண்டர்!

Published

on

தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கடலூரில் கலந்து கொண்ட திமுக பொதுக் கூட்டத்தில் ஓர் பதற்றமான சம்பவம் நடந்தது.

கடலூரில் நேற்று உதயநிதி பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பின்னர் தொண்டர்களுக்கு கையசைத்துக் கொண்டிருந்தார். உதயநிதி அருகில் வருவதைப் பார்த்த பல திமுக தொண்டர்கள், மேடைக்கு அருகே வந்து அவருக்கு கை கொடுக்க முயன்றனர். சிலர் மனுக்களையும் அவரிடம் கொடுக்க முயற்சி எடுத்தனர்.

உதயநிதி பலரின் கைகளையும் குலுக்கி, சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு திமுக தொண்டர், தன் கையிலிருந்த மனுவை உதயநிதி நோக்கி விட்டெறிந்தார். அது அவரது முகத்தில் சரட்டென்று பட்டு கீழே விழுந்தது. ஒரு கணம் மனு முகத்தில் பட்டதால் செய்வதறியாமல் நின்றார் உதயநிதி.

பின்னர் அவர் தொண்டர்களிடம் கை குலுக்குவதை நிறுத்திவிட்டு மேடையிலிருந்து புறப்புட்டுச் சென்றுவிட்டார். உதயநிதி முகத்தின் மீது மனு வீசியெறியப்பட்டதால் அவருக்கு அருகில் இருந்தவர்கள் பதற்றமடைந்தனர். ஆனால், அவர் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

Trending

Exit mobile version