தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Published

on

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் சேர முடியவில்லை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் சுமார் 400க்கும் மேற்பட்டோருக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு எதிர்ப்பு தெரிவித்த சில மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் சற்றுமுன் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்வதாகவும் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் நாடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

எனவே மனுதாரர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இழப்பீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடால்தான் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து படித்து வரும் நிலையில் அதற்கும் ஆப்பு வைக்கும் அளவில் வகையில் மனு தாக்கல் செய்யப்படுவது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version