Connect with us

தமிழ்நாடு

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published

on

தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து, தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்திருந்த நிலையில், இப்போது நிரந்தரத் தடை விதித்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவிலான நச்சுத்தன்மையை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் காரணத்தால், அதிக நச்சு விளைவுகள் ஏற்படுகிறது. தடை விதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆராய்வு செய்வதற்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினரைச் சேர்ந்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு, பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் தீவிரமாக ஆராய்வு செய்தது‌.

அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆராய்ந்த பின்னர், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழு, இதனை தடை செய்யப் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தரத் தடையை விதித்தது.

தடை விதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள்

வேளாண்மை பல்கலைக்கழக குழுவின் ஆராய்ச்சிக்குப் பிறகு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது..

  1. மோனோகுரோட்டோபாஸ்
  2. ப்ரோஃபெனோபாஸ்
  3. அசிபேட்
  4. ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின்
  5. குளோர்பைரிஃபோஸ் சைபர்மெத்ரின்
  6. குளோர்பைரிபாஸ்

மேற்கண்ட ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளும் தடை செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வதை தடுக்கவே, தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது‌. உண்மையில், விவசாயிகளின் நலன் காக்க வேண்டுமானால், விளைபொருட்களின் விலையை, விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும். அப்படி நடந்தால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்; அதோடு விவசாயிகளின் வருமானமும் பெருகும். அப்போது தான் விவசாயிகளுக்கு தற்கொலை என்ற எண்ணமே வராது.

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!