தமிழ்நாடு

பெரியார் சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: கிருஷ்ணகிரியில் பதட்டம்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாகவே பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்யும் செயல்கள் நடந்து வருவது தமிழகத்தில் அவ்வப்போது பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு போடுவது, செருப்பு மாலை அணிவது உள்ளிட்ட பல அவமதிப்பு செயல்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வந்தது என்பதும் இதனை அடுத்து தகுந்த நடவடிக்கை காவல்துறையினரால் எடுக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே கத்தாழை மேடு என்ற பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை பல ஆண்டுகளாக உள்ளது.

அந்த சிலைக்கு நேற்றிரவு திடீரென மர்ம நபர்கள் சிலர் டயர் மாலை அணிவித்து தீ வைத்ததாக தெரிகிறது. மர்மநபர்கள் செய்த இந்த செயலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக பெரியார் சிலையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

Trending

Exit mobile version