தமிழ்நாடு
‘பேரறிவாளனுக்காக பிக்பாஸில் பேசியதற்கு கமல்ஹாசனுக்கு நன்றி’- அற்புதம்மாள் உருக்கம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நிறைவுற்றது. இந்த நிறைவு விழாவில் கமல்ஹாசன் ஆற்றிய உரைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வார நாட்களில் நிகழ்ச்சியைக் காண்பதை விட வார இறுதி நாட்களில் கமல்ஹாசனின் வருகைக்காகக் காத்திருக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகம். வாராவாரம் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுப் பிரச்னைகளைத் தாண்டி தனது அரசியல் கருத்துகள், பன்ச் வசனங்கள் ஆகியவற்றையும் அவ்வபோது கமல்ஹாசன் தூவுவது வழக்கம். அதையும் தாண்டி அரசியல் பிரச்னைகள், நூல் பரிந்துரை ஆகியவற்றுக்கு தனி ரசிகர்கள் வட்டமே கமல்ஹாசனுக்கு உண்டு.
இந்த வகையில் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ன் இறுதி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலைத் தாண்டி அரசியலும் பேசினார் கமல்ஹாசன்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளனின் விடுதலைக்காக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினர். இது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது. இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், “குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை… ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை… பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை…
ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை…
பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!
????????#ReleasePerarivalan pic.twitter.com/aEiTqVPG0k— Arputham Ammal (@ArputhamAmmal) January 18, 2021