வணிகம்
பெப்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகும் இந்திரா நூயி!
அமெரிக்கக் குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ நிறுவனத்தின தலைமை நிர்வாக அதிகாரி பதவியை 12 வருடமான நிர்வகித்து வந்த தமிழரான இந்திரா நூயி வர இருக்கும் அக்டோபர் 3-ம் தேதியுடன் பதவி விலக இருக்கிறார்.
பெப்ஸிகோ நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆக உள்ள ராமோன் லாகுருத்தா இந்திரா நூயினைத் தோற்கடித்துப் போர்டு குழு உறுப்பினர்களின் நன்மதிப்பினை பெற்றுள்ளார்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான் இவ்வளவு பெரிய பொறுப்பினை நிரகிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை என்று இந்திரா நூயி தெரிவித்துள்ளார். அதே நேரம் பெப்ஸிகோவின் தலைவராக 2019-ம் ஆண்டு வரை இந்திரா நூயி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.