இந்தியா
சாலையில் நடமாட கூட நிபந்தனை: மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சாலையில் நடமாட கூட பொது மக்களுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது என்பது கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை மற்றும் என்று தற்போதைய ஒமிக்ரான் அலையிலும் மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஊரடங்கு, 144 தடை உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் மகாராஷ்டிர மாநிலத்திலும், தலைநகர் மும்பையிலும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சாலையில் நடமாட கூட பொது மக்களுக்கு கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் 5 பேருக்கு மேற்பட்ட நபர்கள் சாலையில் ஒன்றாக சேர்ந்து நடமாட தடை விதிக்கப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.