இந்தியா
கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளியுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ் என்ற வங்கி கணக்கு வெளியிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வங்கி கணக்கிற்கு நேரடியாகவும், யூபிஐ மூலமாகவும், பிம், போன்பே, அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம், மோபிகுவிக் போன்ற சேவைகள் மூலமாக நிதியுதவி அளித்து, கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க பொது மக்களால் உதவி செய்ய முடியும்.
தமிழக அரசுக்கு நேரடியாக உதவ வேண்டுமெனில் https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணைப்பிற்குச் செல்லவும்.