Connect with us

தமிழ்நாடு

ரொம்ப நேரம் நிக்கிறோம்.. ஈரோடு கிழக்கில் மக்கள் புகார்.. என்னது மை அழியுதா? உண்மையா?

Published

on

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் தொடர்பாக மக்கள் சிலர் அதிரடி புகார்களை வைத்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடம் ஆக போகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு மார்க் கொடுக்கும் விதமாக தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கில் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவேரா திருமகன் இருந்தார். இவர் மாரடைப்பு காரணமாக கடந்த மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3.00 மணி வரை 59.28% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஈவேரா திருமகனின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு போட்டியிடுகிறார். இவர் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கி உள்ளார்.

மேலும் நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.இந்த நிலையில்தான் அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காலையில் இருந்து வரிசையில் காத்திருப்பதாகவும். வெயிலில் 2-3 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் வாக்களிப்பது சிரமமாக உள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று எப்படியும் வாக்கு பதிவு 70 சதவிகிதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் இந்த புகாரை வைத்து உள்ளனர். அதோடு காலையில் விரலில் வைக்கும் மை அழிந்து போவதாக புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த புகாரில் உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!