தமிழ்நாடு

மெரீனா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் அனுமதி: பொதுமக்கள் நிம்மதி!

Published

on

கடந்த சில நாட்களாக சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது என்பதும் அவற்றில் ஒன்று சென்னை மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் அனுமதி இல்லை என்றும் நடைப்பயிற்சி செல்பவர்கள் கூட அனுமதியில்லை என்றும் அறிவித்து இருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் இரவு நேர ஊரடங்கு முழு ஊரடங்கு உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடற்கரையில் கூட்டம் கூட கூடாது என்றும் கவசம் அணிந்து விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடற்கரைக்கு செல்ல பொது மக்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

seithichurul

Trending

Exit mobile version