Connect with us

தமிழ்நாடு

பொது இடங்களில் குப்பையைக் கொட்டினால் அபராதம்: எச்சரிக்கும் சென்னை மாநகராட்சி!

Published

on

சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

குப்பை கொட்டினால் அபராதம்

சென்னை மாநகராட்சி சாலையில் குப்பை கொட்டுவது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சென்னை மாநகரைத் தூய்மையாகவும், அழகுடனும் பராமரித்துக் கொள்ள சிங்காரச் சென்னை 2.0 உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில், குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி முதல் மே மாதம் 11 ஆம் தேதி வரையில், பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 90-ம், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 300-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. இவை இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு

ஆகவே, பொதுமக்கள் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து விட்டு, சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனை மீறும் நபர்களுக்கு நிச்சயமாக அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் காலி நிலங்களில் அதிக குப்பைகள் காணப்பட்டால், சென்னை மாநகராட்சியின் உடனே 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!