தமிழ்நாடு

விஜய் அரசியலுக்கு வருவது உறுதி: அடித்துச்சொல்லும் பழ.கருப்பையா!

Published

on

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. நிகழ்கால அரசியலை மையமாக வைத்து இந்த படத்தின் கதை நகர்கிறது. இதனால் தமிழக அரசியலில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்கார் படமும், அதனால் உருவான சர்ச்சைகளும் தான் பேச்சாக உள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரான விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என சர்கார் படத்தில் வில்லனாக நடித்துள்ள பழ கருப்பைய தெரிவித்துள்ளார். சர்கார் படத்தில் விஜயுடன் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் ஒரு உறுதி இருக்கிறதை நான் பார்த்தேன்.

தான் அளப்பரிய அன்பு செலுத்தும் இந்த உலகத்துக்கும், இளைஞர்களுக்கும் அவர் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். மேலும் எல்லா நடிகர்களும் களைத்துப்போன காலத்தில் அரசியலுக்கு வருகிறார்கள். அனால் நான் விறுவிறுப்பாக இருக்கும் காலத்திலேயே அரசியலுக்கு வரவேண்டுமா என்று சிந்தித்து கொண்டிருக்கின்றேன் என்றும் சொன்னார். ஆனால் அவர் இப்போது அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார் என்றார் பழ கருப்பையா.

Trending

Exit mobile version