தமிழ்நாடு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!
![pazha karuppaiya kamal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/pazha-karuppaiya-kamal.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக புதிய கூட்டணி ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கமலஹாசன் கட்சியில் பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா இணைந்துள்ளார்.
பழ கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து இருப்பதாகவும் வரும் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியத்துவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சரத்குமார் மற்றும் ஐஜேக கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சற்று முன் வெளியான தகவலின்படி சட்ட பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலில் போட்டி என அறிவித்துள்ளது
இதனை அடுத்து மேலும் சில கட்சிகளும் கமல் கட்சியின் கூட்டணியுடன் இணைய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.