இந்தியா
பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டாரா? அதிர்ச்சி தகவல்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய வாடிக்கையாளர்களை புதிய கணக்குகளை திறப்பதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பேடிஎம் நிறுவனர் ஷர்மா என்பவர் காரை ஓட்டிச் சென்றபோது அந்த கார் விபத்துக்குள்ளானதாகவும் அவர் மோதியது காவல்துறை ஆணையர் கார் என்றும் கூறப்படுகிறது .
இதனையடுத்து சர்மா மீது கவனக்குறைவாக கார் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், அதன் பின் ஜாமினில் விடுதலையானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்ட தகவல் எந்த ஊடகத்திலும் வராத நிலையில் தற்போது தான் அந்த தகவல் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.