தமிழ்நாடு

எனக்கு இன்னும் நினைவில் உள்ளது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பவன்கல்யாண்

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரை உலகின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தாதா சாகேப் பால்கே விருது பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த நடிகர்களுக்கான தாதாசாகேப் பால்கே விருதை திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது சார்பாகவும் ஜனசேனா சார்பாகவும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந்த் அவர்கள் இந்த விருதுக்கு அனைத்து வகையிலும் தகுதியானவர். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ள அவர் எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என் மூத்த சகோதரர் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த பந்தி போட்டு சிம்ஹாம் மற்றும் காளி படங்கள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன. திரு ரஜினிகாந்த் அவர்கள் மேலும் நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version