சினிமா செய்திகள்

மறுமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு பிக்பாஸ் பாவனியின் உருக்கமான பதில்!

Published

on

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி மறுமணம் எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு உருக்கமாக பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக ராஜு, இரண்டாமிடத்தில் பிரியங்கா இருந்த நிலையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் பாவனி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியே வந்த பாவனிக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடிய பாவனியிடம், ‘உங்களுடைய அடுத்த திருமணம் எப்போது என்று ரசிகர் கேட்ட ஒரு கேள்விக்கு மனம் திறந்து உருக்கமாக பதில் கூறியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இனி அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும், தன்னுடைய தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் சினிமாவில் மற்றும் தொலைக்காட்சியில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்பது மட்டுமே தன்னுடைய கொள்கையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அபிநய் அவருடன் நெருக்கமாக பழகிய போது அவர் அதை தவிர்த்தார் என்பதும் அதேபோல் அமீர் தனது காதலை வெளிப்படையாக சொன்ன போதிலும் அந்த காதலை அவரை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவரின் மறைவிற்குப் பிறகு வேறு ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதலும் சரியாக வராததால் அவரை விட்டு பிரிந்து விட்டதாகவும் பாவனி கடந்து வந்த பாதை டாஸ்க்கில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் பாவனி இனி திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிக அளவு திரைப்படங்கள் வெப்சீரிஸ் தொலைக் காட்சிகளில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version