செய்திகள்
பிக்பாஸ் பவானிக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி….
தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார்.
இவர் 2017ம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகத்தை மறக்க பவானி ரெட்டி மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில சமயம் கொஞ்சம் கவர்ச்சியாகவும் அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்டு தற்போது மேலும் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை போராடினார். ஆனாலும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை.
தற்போது, தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பட்தாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘சாதாரண அறிகுறிகளுடன் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் திரும்ப வருவேன்’ என பதிவிட்டுள்ளார்.