தமிழ்நாடு

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி!

Published

on

சாலமன் பாப்பையா நடுவராக இருக்கும் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு வரும் பாரதி பாஸ்கர் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருபவருமான பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற பேச்சை கேட்காதவர்கள் இருக்க முடியாது. தீபாவளி பொங்கல் போன்ற திருநாளின் போது சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் பட்டி மன்றத்தில் பாரதி பாஸ்கர் மிக அருமையாக பேசுவார் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா ஆகிய இருவரும் எதிரெதிர் அணியில் பேசுவார்கள் என்பதும் இருவருக்கும் இடையே தான் அதிக போட்டி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா ஆகிய மூவரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கு இன்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மூளைக்குச் செல்லும் நரம்புகளின் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து பாரதி பாஸ்கர் விரைவில் குணமாகி மீண்டும் பட்டிமன்றத்துக்கு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version