சினிமா

‘பத்து தல2’, ‘விடிகே2’: சிம்புவின் முதல் சாய்ஸ் எது?

Published

on

‘பத்து தல’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிம்பு ‘பத்து தல’ பார்ட் 2 அல்லது ‘வெந்து தணிந்தது காடு2’ இதில் எதை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்விக்கு இயக்குநர் கிருஷ்ணா பதிலளித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் ‘மஃப்டி’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தின் தழுவலாக தமிழில் ‘பத்து தல’ திரைப்படம் வெளியானது. கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், சிலம்பரசனின் நடிப்பும் இந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் இயக்குநர் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகமும் வரும் எனத் தெரிவித்திருந்தார்கள். தற்பொழுது ‘வெந்த்ய் தணிந்தது காடு பார்ட் 2’ அல்லது ‘பத்து தல பார்ட் 2’ இரண்டில் எது முதலில் வெளியாகும் என இயக்குநர் கிருஷ்ணாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் கிருஷ்ணா தெரிவித்திருப்பதாவது, “இரண்டு படங்களுமே நல்ல படங்கள் தான்.

இரண்டுமே சிம்புவின் வேறொரு கோணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டுமே வெற்றி படங்கள். இதில் எந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வரவேண்டும் என்பதை சிம்பு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ‘பத்து தல’ படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான். அதை முடித்துவிட்டு, அப்போதிருக்கும் சூழலை பொறுத்துதான் சிம்பு முடிவு செய்வார். நானும் இந்த படத்தின் மூடிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு சிறிது கால இடைவேளி தேவைப்படுகிறது. அதன் பிறகு எனது அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடுவேன்” என கிருஷ்ணா தெரிவித்து இருக்கிறார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version