கிரிக்கெட்

இந்திய மக்களுக்காக பேட் கம்மின்ஸ் செய்த மிகப்பெரிய உதவி!

Published

on

ஆக்சிஜன் வாங்குவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரும், தற்போது கொல்கத்தா அணியில் விளையாடி வருபவருமான பேட் கம்மின்ஸ் இந்தியர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திண்டாடி வருவதை கண்டு நிதியுதவி செய்துள்ளார். அவர் 50,000 அமெரிக்க டாலர் நன்கொடையாக கொடுத்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 37 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த இக்கட்டான நிலையில் கிரிக்கெட் விளையாடலாமா என அனைவரும் நினைக்கலாம் என்றும் ஆனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரனோ இரண்டாவது அலையால் மக்கள் தத்தளித்துக் கொண்டு வரும் நிலையில் கம்மின்ஸ் போலவே மாற்ற ஐபிஎல் வீரர்களையும் தாராளமாக ஆக்சிஜன் வாங்க நிதி உதவி செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending

Exit mobile version