இந்தியா
மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை.. மே 11 முதல் ரிசர்வேஷன்.. மோடி அரசு அதிரடி!
மத்திய அரசு இன்று மாலை எடுத்து அதிரடி முடிவில், மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், மே 11 முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 15 ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வேஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை, பெங்களூரு, டெல்லி, பாட்னா, மும்பை, மடகான், அகமதாபாத், ஜம்மு தாவி, அகர்தலா, பிலாஸ்பூர் வழித்தடங்களில் ரயில் சேவை கிடைக்கும்.
பயணிகள் வருகையைப் பொறுத்து 300 சிறப்பு ரயில்கள் வரை இந்தியன் ரயில்வேஸ் இயக்க முடிவு செய்துள்ளது.
மே 11 மாலை 4 மணி முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான டிகெட்களை முன் பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
https://seithichurul.com/news/india/from-may-12-who-are-all-allowed-in-trains-to-travel-in-india/22772/