வணிகம்

பிஸ்கேட் விலையை உயர்த்தும் பார்லே, பிரிட்டானியா; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published

on

இந்திய பொருளாதார மந்த நிலை, நுகர்வோர் வங்கும் சக்தி குறைவு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பிஸ்கேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன.

கோதுமை மாவு, எண்ணெய் மற்றும் சர்க்கரை விலை உயர்வே இந்த பிஸ்கேட் விலை உயர்வுக்கான முடிவு என்று கூறப்படுகிறது.

பார்லே நிறுவனம் தங்களது பிஸ்கேட் தயாரிப்புகளின் விலையை 5 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளது. பிரிட்டானியா நிறுவனம் 3 சதவீதம் வாஇ விலை உயர்த்த முடிவு செய்துள்ளது.

சில பிஸ்கேட் பாக்கெட்களில் இரண்டு நிறுவனங்களும் எடையை குறைத்து விலையை சரி செய்யவும் முடிவு செய்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் பார்லே நிறுவனம் 10,000 நபர்களை பணிநீக்கம் செய்து, ஆட்குறைப்பு செய்ய உள்ளதாகவும், இதற்கு காரணம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஏற்பட்ட விற்பனை தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version