சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள் தந்தைக்கு சொந்தவீடு: மாரி செல்வராஜ் இதை செய்திருக்கலாமே?

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நடித்தவருக்கு தற்போது சொந்த வீடு கிடைத்து உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தெருக்கூத்து மற்றும் நாடகக் கலைஞனாக தங்கராஜ் என்பவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதிருக்கு தந்தையாக நடித்திருப்பார். மேலும் இவர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து இருப்பார் என்பதும் அந்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .

தெருக்கூத்து தொழில் நலிந்துவிட்டதால் தோட்ட வேலை செய்து வந்த இவர் மாரிசெல்வராஜ் கண்ணில் பட்டதால் நடிகர் ஆனார் என்றாலும் அந்த படத்துக்கு பிறகு அவருக்கு வேறு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் 65 வயது ஆகிவிட்டதால் அவரால் வேலை செய்யவும் முடியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய வீடு இடிந்து தரைமட்டமாகி விட்ட நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் தங்கராஜுக்கு புதிய வீடு கட்ட உதவி செய்தார். தற்போது அவருக்கு புதிய வீடு கிடைத்துள்ளது என்பதும் அந்த வீட்டை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சாவியை கொடுத்ததை அடுத்து தங்கராஜ் மகிழ்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கலந்து கொண்ட போதிலும் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கராஜூக்கு மாவட்ட ஆட்சியர் வீடு கட்டு கொடுக்கும் முன்னர் மாரி செல்வராஜே வீடு கட்டிக் கொடுத்து இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version