சினிமா செய்திகள்

ஏழ்மையில் தவிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ நடிகர்… உதவிய மாவட்ட கலெக்டர்..!

Published

on

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் கரகாட்டக் கலைஞரும் நடிகருமான தங்கராசு.

தங்கராசு பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆனார். நிஜ வாழ்க்கையிலும் படத்தில் காட்டப்பட்டதைப் போலவே கரகாட்டக் கலைஞர் ஆக வாழ்ந்து வருபவர் தங்கராசு. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தென் தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணமாக தங்கராசு வசித்து வந்த குடிசை வீடு மிகுந்த சேதாரம் அடைந்தது.

வீட்டைச் சரி செய்ய பண வசதி இல்லாததால் குடிசை வீடு கூட இல்லாத நிலையில் தவித்து வருகிறார் தங்கராசு. சாப்பாட்டுக்கும் கஷ்டம் என்பதால் பகலில் கூழ் மட்டும் குடித்து வாழ்ந்து வருகிறாராம். இவரது நிலையை அறிந்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் தங்கராசுவின் வீட்டைச் சரி செய்து தர தாமாகவே முன் வந்துள்ளார்.

தங்கராசு தனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தவர்கள் ஏதேணும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறாராம்.

Trending

Exit mobile version