சினிமா
என்னன்ன சொல்றான் பாருங்க! 6 கோடியே பத்தல பத்தல; அடுத்த படத்துக்கு பூஜை போட்ட சுதாகர், கோபி!
![gowsu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/gowsu.jpg)
முதல் படம் நடிக்கப் போறோம் கிரவுட் ஃபண்டிங் மூலம் காசு போடுங்க என பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி கேட்டதும் பசங்க நல்லா வரட்டும்ப்பா என நம்பி 25000 தயாரிப்பாளர்கள் சேர்ந்து அதிகபட்சமாக 6 கோடி வரை பணம் போட்டதாக சுதாகர் கோபியே மணி கம் டுடே கோ டுமாரோ படத்தின் பூஜையின் போது சொல்லி இருந்தனர்.
ஆனால், லாக்டவுனை காரணம் காட்டி அந்த படத்தை ஆரம்பிக்காமல் இருவரும் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டனர் என அவர்கள் இருவர் மீதும் மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்நிலையில், முதல் படத்தை ஆரம்பிக்காத நிலையில், 2வது படத்தை ஆரம்பித்து அதற்கான பூஜையை இன்று போட்டுள்ளனர்.
குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இந்த படம் உருவாகும் என பேட்டியளித்த கோபி மற்றும் சுதாகர் முதல் படம் என்ன ஆச்சு என கேட்டதற்கு, அந்த படம் எடுக்க நிறைய பணம் செலவாகும். கிரவுட் ஃபண்டிங் முறையில் வந்த பணம் ப்ரீ ப்ரொடக்ஷனுக்கே செலவாகிடுச்சு என அவர்கள் வீடியோவில் வருவது போல கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அடுத்த படத்திற்கான பூஜையை போட்டு அட்வான்ஸ் வாங்கி உள்ள நிலையில், இதை வைத்தாவது படம் எடுப்பீங்களா அல்லது புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்கான பிளானா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்த படத்தில் வரும் வசூலை வைத்து முதல் படத்தை எடுப்போம் என பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நல்லா அல்வா கிண்டி உள்ளனர். பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலமாகவே நன்றாக சம்பாதித்து வரும் இருவரும் இணைந்து இந்த முறையாவது நல்ல படத்தை ரசிகர்களுக்கு கொடுப்பார்களா? அல்லது அதுவும் அந்த ஜாம்பி படம் மாதிரி வச்சு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. என்னன்ன சொல்றானுங்க பாருங்க!