வைரல் செய்திகள்

பானி பூரியில் ரசத்துக்குப் பதிலாக ஐஸ்க்ரீம்.. வைரலாகும் வீடியோ!

Published

on

வட மாநிலங்களிலிருந்து நமது மாலை நேர சிற்றுண்டியை ஆக்கிரமத்த ஒரு உணவு என்றால் அதில் முதலிடத்தில் பானி பூரி இருக்கும்.

குழிப்பணியாரம், வடை, போண்டா, சுண்டல் என இருந்த நமது மாலை நேர சிற்றுண்டியை அந்த அளவிற்கு இந்த பானி பூரி ஆக்கிரமித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

பானி பூரி என நாம் பொதுவாக சொன்னாலும் பூரியில் கொஞ்சம் உருளைக்கிழங்கு வைத்து அதில் ரசம் ஊற்றிக் கொடுத்தால் அது பானி பூரி.

Pani puri and masala puri

அந்த பூரியை நொறுக்கி அதில் கொஞ்சம் வேக வைத்து பட்டாணி, குறுமா, சிறிதாக நறுக்கிய வெங்காயம் போன்றவற்றை கலந்து கொடுத்தால் அது மசாலா பூரி.

நிறையப் பொறி, அதில் கொஞ்சம் பானி பூரி மசலா, கேரட், வெங்காயம் போன்றவற்றைக் கலந்து கொடுத்தால் அது பேல் பூரி. இப்படி பல்வேறு பானி பூரி வகைகள் நமது மாலை சிற்றுண்டியை ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக பானி பூரியில் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வைத்து வழங்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

பலர் அதனை ருசித்துப் பார்க்க வேண்டும் என கூறும் நிலையில், சிலர் இது என்னடா பானி பூரிக்கு ஏற்பட்ட கொடுமை எனவும் கூறி வருகிறார்கள். நீங்களும் அந்த வீடியோ பார்த்து உங்களது நண்பர்களுடன் பகிருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version