கிரிக்கெட்

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்த பாண்டியா! வெல்கம் பேக் ஆல்ரவுண்டர்

Published

on

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில் சொதப்பி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் அதைவிட மோசமாக தோல்வியை தழுவியது. இதனால் தற்போது இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்த பாண்டியா

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்த பாண்டியா

ஆனால் இந்த முறை இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடுகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் எடுத்தது. அதே சமயம் இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு சுருட்டியது.

ஹர்திக் பாண்டியாக் சிறப்பாக பந்து வீசினார். 6 ஓவர் வீசிய இவர் 5 விக்கெட் எடுத்தார். இதனால் தன் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்த புகார்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version