சினிமா செய்திகள்

கொரோனா பரவலால் ‘சூர்யா 40’ படப்பிடிப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Published

on

தமிழகத்தில் கொரனோ வைரஸ் மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தியேட்டர்கள் உள்பட பலவற்றை மூட உத்தரவிட்ட போதிலும் படப்பிடிப்புக்கு இன்னும் தடை விதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் படப்பிடிப்புகள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் திடீரென சிக்கல் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘சூர்யா 40’ படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றுக்காக 100 ஸ்டண்ட் கலைஞர்களுடன் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போதைய கோரனோ வைரஸ் அதிகரிப்பு காரணமாக இந்த சண்டை காட்சியை படமாக்க்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக பாண்டியராஜன் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரே இடத்தில் 100 ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்குவது சாத்தியமில்லை என்றும் அது சூர்யா உட்பட படக்குழுவினர்களுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதால் இந்த சண்டை காட்சியின் படப்பிடிப்பு ஒத்தி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஸ்டண்ட் காட்சி தவிர மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் கொரோனா வைரஸ் நிலைமை சரியானதும் அந்த சண்டைக் காட்சி படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version