டிவி
அதிர்ச்சி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தற்கொலை முயற்சி! #RIPChitra
![Chitra - Mullai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/09/Chitra-Mullai.jpg)
பாண்டியஸ் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்ராவுக்கு சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரி மாதம் இவருக்கு திருமணம் ஆக இருந்தது.
தற்போது பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியல் படப்பிடிப்பு சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இவர் திருவாண்மையூர் பகுதியில் வசித்து வந்தார். தினமும் ஷூட்டிங் சென்று வர சிரமமாக இருந்ததால் செம்பரம்பாக்கம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த அழைப்பின் பெயரில், நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சித்ராவின் உடலை மீட்டு கீழ் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பிரோசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது ஹேமநாத்தும் அதே விடுதியில் தங்கி இருந்ததாகவும், சித்ரா ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு குளித்துவிட்டு வருவதாக அவரது அறைக்குச் சென்றுள்ளார். எனவே ஹேமநாத் தனது அரையிலிருந்துள்ளார்.
பின்ன நீண்ட நேரத்திற்கு பிறகும் அவர் ஹேம நாத்தை தொடர்புகொள்ளவில்லை. எனவே சந்தேகம் அடைந்து அறைக் கதவைத் தட்டிய போது எந்த பதிலும் இல்லை. அவரது அறையைத் திறக்கவும் முடியவில்லை. அவரை தொடர்புகொண்ட போதும் எந்த பதிலும் இல்லை. எனவே சந்தேகம் அடைந்து, விடுதி ஊழியர்களின் உதவியுடன் அறையைத் திறந்து பார்த்தால், புடவையை மின் விசிறியில் கட்டி தூக்கிட்டுக் கொண்டு இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.