தமிழ்நாடு

அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட ரயில்.. பயணிகள் அவதி!

Published

on

நிவர் புயல் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் பல்லவன் ரயிலில் பயணிக்கு நேற்று வரை டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளது. எனவே டிக்கெட் பெற்ற பயணிகள் இன்று அதிகாலை ரயில் நிலையம் வந்து பார்த்தால், ரயில் நிலையத்தில் யாருமில்லை.

மேலும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறக் கூட ஆள் இல்லாத நிலையில், வழக்கம் போல் அதிகாலையில் ரயில் நிலயம் வந்த பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாகப் பல்லவன் ரயில் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், அதுகுறித்த தகவலைப் பயணிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பித் தெரிவித்து இருக்க வேண்டும்.

ஆனால் ரயில் ரத்து குறித்த எந்த தகவலும் வரவில்லை என்று காரைக்குடியில் அவதிக்குள்ளான பயணிகள் கூறுகின்றனர்.

Trending

Exit mobile version