Connect with us

இந்தியா

காரில் இருந்து பணத்தை வீசும் மர்ம மனிதன்.. திரைப்படம் போலவே நடந்த பரபரப்பு சம்பவம்..!

Published

on

சமீபத்தில் மர்ம மனிதன் ஒருவர் காரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியே வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த பார்சா என்ற திரைப்படத்தில் கதாநாயகன் போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக கரன்சிகளை வெளியே விசுவார் என்பதும் அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் தப்பி விடுவார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஓடும் காரில் இருந்து கரன்சி நோட்டுகளை வீசி எறிந்த மர்ம மனிதர்களின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவில் உள்ள காட்சியின்படி ஒரு நபர் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார், இன்னொரு நபர் காரின் பின்பகுதியில் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவர் மெதுவாக காரின் கதவை திறக்கிறார். அப்போது அவர் தனது வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை வெளியே வீசுகிறார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் கேட்டவுடன் அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பிலும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை தற்போது காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையின் அதிகாரி ஒருவர் கூறிய போது ’பணத்தை அள்ளி வீசிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். குருகிராம் பகுதியில் உள்ள கோல்ப் மைதான சாலையில் தான் இந்த சம்பவம் நடந்தது என்பது திரைப்படத்தின் காட்சியை போல் நடந்த இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அந்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவது எப்போது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசினார்களா? அல்லது வேறு என்ன காரணத்திற்காக வீசினார்களா? என்பதையும் அவர்கள் பிடிபட்டவுடன் விசாரணையில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மர்ம மனிதனால் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை சேகரித்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையில் அதை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ரூபாய் நோட்டுகளில் இருந்து ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மர்ம மனிதன் பேசிய ரூபாய் நோட்டுகளை எடுத்த பொதுமக்கள் அனைவரும் காவல் துறையில் ஒப்படைப்பார்களா என்பது சந்தேகமே.

 

 

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!