தமிழ்நாடு

ப.சிதம்பரம் எம்பியாக உதவி செய்யும் திமுக? சோனியாவுக்கு சென்ற தகவல்!

Published

on

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது

எனவே தமிழகத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்ய திமுகவின் உதவியை நாடி இருப்பதாகவும் இதற்காக அவர் சோனியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் வரும் ஜூன் மாதத்துடன் 6 ராஜ்யசபா எம்பி களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து இதில் நான்கு இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவிற்கும் செல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் இருப்பதால் நான்காவது எம்பியை தேர்வு செய்ய திமுகவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவு நிச்சயம் தேவை. இதனை அடுத்து அந்த ஆதரவை வைத்து தன்னை தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்ய திமுகவிடம் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

அதுமட்டுமின்றி சோனியாவிடம் இந்த வாய்ப்பு குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக திமுகவும் பச்சைக்கொடி காட்டும் என்றும் கூறப்படுகிறது .

 

seithichurul

Trending

Exit mobile version