/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

தமிழ்நாடு

பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக ஏற்று கொண்டதா அதிமுக? ப.சிதம்பரம் கேள்வி

Published

on

பெரியாருக்கு பதிலாக மோடியை தங்கள் ஆசானாக அதிமுக ஏற்றுக்கொண்டதாக என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியாரிஸத்தை ஒழிக்க தமிழகத்திற்கு வந்து உள்ளதாக பாஜக கட்சியின் எம்பி கூறியதற்கு கடும் கண்டனத்தை ப,.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’தன்மானத்தை மீட்டவர் தந்தை பெரியார் என்றும் சனாதன தர்மம் என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர் தந்தை பெரியார் என்றும் கூறினார்.

மேலும் தான் ஒரு திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுக, பாஜக எம்பிய்யின் இந்த பேச்சை ஏன் கண்டிக்கவில்லை என்று கூறிய சிதம்பரம், தந்தை பெரியாருக்கு பதிலாக பிரதமர் மோடியை தங்கள் ஆசானாக, வழிகாட்டியாக ஈபிஎஸ் ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டதா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பிள்ளார்.

பெரியாரிஸத்தை ஒழிக்கவே பாஜக தமிழகத்தில் வந்துள்ளதாக அக்கட்சியின் எம்பி தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் கூறினார் என்பதும், இதற்கு அதிமுக கூட்டணி கூட்டணி கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version