தமிழ்நாடு
பெட்ரோல், டீசல் வாட் வரி குறைப்பில் குறை கண்டுபிடித்த ப சிதம்பரம்!
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ரூ.9.50 குறைப்பதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் .
மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. இதனால் சென்னை உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி கேரளா ராஜஸ்தான் உள்பட ஒரு சில மாநிலங்களிலும் வாட் வரி குறைக்கப்பட்டதால், அம்மாநிலங்களில் பத்து ரூபாய்க்கு மேல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்ததை பாராட்டாமல் அதிலும் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் குறை கண்டுபிடித்து உள்ளார். பெட்ரோல் விலையை இரண்டு மாதங்களில் பத்து ரூபாய் உயர்த்தி விட்டு ரூபாய் 9.50 மட்டும் குறைப்பதா? என்றும் செஸ் வரியை குறைக்காமல் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன்? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசு வரியை குறைத்து நிலையில் மாநில அரசு வாட் வரியை ஏன் குறைக்கவில்லை என்ற கேள்வியை ப. சிதம்பரம் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.