தமிழ்நாடு
கோயம்பேடு சந்தை கழிவுகள் வைத்து கவர்ச்சிகரமான தயாரிப்புகள்! முழு விவரம்!
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகத்தில் இருந்து 70 முதல் 75 டன் வரை சேரும் வாழைக்கழிவுகள் இனி கழிவுகள் அல்ல!
இவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத கவர்ச்சிகரமான தயாரிப்புகளாக மாற்றப்படவுள்ளன. இதற்கான முன்முயற்சியை கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு எடுத்துள்ளது.
அதற்கு விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளியை கோருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாழைக்கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்து மதிப்பு கூட்டும் (value addition) செயல்பாடுகளில் ஈடுபட விரும்பும் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.
இந்த செயல்முறை வருவாய் பகிர்வு அடிப்படையில் நடைபெறும். அதாவது, வாழைக்கழிவுகளை சேகரித்து, பதப்படுத்தி அவற்றைக் கொண்டு ஆடைகள், தட்டுகள் போன்ற பல்வேறு மக்கும் தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுடன் சந்தை நிர்வாகம் இணைந்து பணியாற்றும்.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான புதிய தீர்வும் கிடைக்கும்.
எனவே, இந்த புதுமையான திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் சந்தை நிர்வாகத்தை அணுகலாம்.