தமிழ்நாடு

அமமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வரும் ஒவைசி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர்வதற்காக திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கொடுத்து அரவணைத்துக் கொண்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இஸ்லாம் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகளை கொடுத்தார் அம்மா முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமமுக தேர்தல் அறிக்கை வரும் 12ஆம் தேதி சென்னையில் வெளியிட இருப்பதாகவும் மிகப்பெரிய பொதுக்கூட்டம் அன்று நடைபெற இருப்பதாகவும் ஏற்கனவே அமமுக தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ள ஒவைசி, இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வருகையால் இஸ்லாமியர் போட்டு பிரியும் என்றும் இதனால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version