சினிமா செய்திகள்

இது ஓவியாவின் மீடூ பதிவா?

Published

on

ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடிகை ஓவியா ஒரு கவிதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ் வெளிச்சமடைந்த ஓவியா, தற்போது 90 எம்.எல் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும், விமலுடன் களவானி 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெண்களை பெருமைப் படுத்தும் விதமாகவும் அதே சமயம் ஆண்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கும் விதமாகவும் புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு வென்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோஸ்டிங்கின் கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

”பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்கள்
எதை கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றுவார்கள்
உயிரணுவைக் கொடுத்தால் குழந்தையாக மாற்றுவாள்
வீடு கொடுத்தால் சிறந்த இல்லமாக மாற்றுவாள்
மளிகை தந்தால் அறுசுவை உணவு கொடுப்பாள்
புன்னகையை கொடுத்தாள் அவள் இதயத்தையே கொடுப்பாள்
அவளுக்கு மோசமாக எதையாவது கொடுத்தால்
அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்”!

என்ற கவிதையை பகிர்ந்துள்ளார். மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தனது கருத்தாக ஓவியா இதனை பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version