சினிமா செய்திகள்

கலாச்சாரம் என்று கூறி மூடி மறைக்க வேண்டாம், வெளிப்படையாக இருக்க வேண்டும்: ஓவியா

Published

on

நடிகை ஓவியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மூடி மறைக்க வேண்டாம் என்றும், எதையும் வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை ஓவியா தனது பிறந்தநாளின் போது சேலத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் மாணவிகளுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் ’ஓ சொல்றியா மாமா’ உள்பட ஒரு சில பாடல்களுக்கு நடனமாடிய அவர் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது, ‘பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆண் குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்துமே வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது என்றும் தெரிவித்தார். கலாச்சாரம் என்று கூறி எதையும் மூடி மறைக்க வேண்டாம் என்றும் வெளிப்படையாக அனைத்தையும் பேச வேண்டும் என்றும் அவ்வாறு பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார் .

பெண்களுக்கு கல்வியில் சம உரிமை வழங்க வேண்டும் என்றும் சிறு வயதிலேயே ஆண் பெண் என்ற பேதம் இல்லை என்றும் அனைவரும் சமம் என்று குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

நாளைய நாளை நினைத்து வாழ்வதைவிட இன்று சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றும் இது அட்வைஸ் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version