சினிமா செய்திகள்

கலாசாரத்தை கெடுத்து விட்டதாக ஓவியா மீது போலீசில் புகார்

Published

on

ஓவியாவின் 90எம் எல் படம் கடந்த வாரம் வெளியாகி, பலராலும் திட்டித் தீர்க்கப்பட்டாலும், தியேட்டர் காட்சிகள் 80% ஹவுஸ்ஃபுல்லாகவும், சென்னையில் 95% ஹவுஸ்ஃபுல்லாகவும் தான் தொடர்ந்து ஓடி வருகிறது.

இந்நிலையில், சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர், நடிகை ஓவியா மற்றும் 90எம் எல் பட இயக்குநர் அனிதா உதூப் எனும் அழகிய அசுரா மற்றும் ஓவியாவின் தோழிகளாக நடித்த அந்த மூன்று பெண்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.

இந்த படம் சமூகத்தையும், இளைஞர்களையும் தமிழ் கலாசாரத்தையும் சீரழிப்பதால் படத்தை திரையரங்கில் திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending

Exit mobile version