சினிமா
ஓவியாவுடன் காதல்: விளக்கமளிக்கும் ஆரவ்!
நடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறினார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அதன் மூலம் சம்பாதித்த ஓவியா முதல் சீசனில் கலந்துகொண்ட சக போட்டியாளரான ஆரவ் உடன் காதல் வயப்பட்டார்.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் காதலிக்கிறார்களா என்பது தெரியவில்லை. இருவரில் யாரும் அதற்கான நேரடி பதிலை தரவில்லை. இந்நிலையில் இதுகுறித்த சந்தேகத்துக்கு தற்போது பதில் அளித்துள்ளார் நடிகர் ஆரவ்.
பிக்பாஸ் முதல் டைட்டிலை வென்ற ஆரவ். அதன் பின்னர் ராஜபீமா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை என்றார்.
மேலும், நானும் ஓவியாவும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்றார் ஆரவ்.