இந்தியா

மாணவர்கள் வங்கி கணக்கில் ரூ.960 கோடி: அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்!

Published

on

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரது வங்கி கணக்கில் ரூபாய் 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் 5.5 கோடி ரூபாய் தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த பணத்தை அந்த இளைஞர் செலவு செய்து விட்டதாக வங்கி அதிகாரிகளிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி அவர்கள் 15 இலட்சம் வங்கி கணக்கில் அனுப்புவதாக கூறி இருந்தார். அதன் முதல் தவணை என்று நினைத்து செலவு செய்துவிட்டேன் என்று கூறியது வங்கி அதிகாரிகளை மேலும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கதிஹார் என்ற மாவட்டத்தை சேர்ந்த குருசந்திரா என்ற மாணவரின் வங்கி கணக்கில் 60 லட்ச ரூபாயும் அஷித்குமார் என்பவர் மாணவரின் கணக்கில் 960 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்செயலாக இந்த இரண்டு மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள இருப்பு தொகையை சோதனை செய்ய சென்றபோது தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை பார்த்த இரண்டு மாணவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அந்த மாணவர்கள் வங்கி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது வங்கி அதிகாரிகள் தவறுதலாக இந்த பணம் செலுத்தப்பட்டு இருக்கும் என்றும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆதம் நகர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது பள்ளி சீருடை வாங்குவதற்காக அரசு பள்ளிகளுக்கு செலுத்தவேண்டிய பணத்தை மொத்தமாக 2 மாணவர்களின் வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தி விட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் இருவரது வங்கி கணக்கில் 960 கோடி ரூபாய் தவறுதலாக செலுத்தப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version