Connect with us

இந்தியா

மாணவர்கள் வங்கி கணக்கில் ரூ.960 கோடி: அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்!

Published

on

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரது வங்கி கணக்கில் ரூபாய் 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் 5.5 கோடி ரூபாய் தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த பணத்தை அந்த இளைஞர் செலவு செய்து விட்டதாக வங்கி அதிகாரிகளிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி அவர்கள் 15 இலட்சம் வங்கி கணக்கில் அனுப்புவதாக கூறி இருந்தார். அதன் முதல் தவணை என்று நினைத்து செலவு செய்துவிட்டேன் என்று கூறியது வங்கி அதிகாரிகளை மேலும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கதிஹார் என்ற மாவட்டத்தை சேர்ந்த குருசந்திரா என்ற மாணவரின் வங்கி கணக்கில் 60 லட்ச ரூபாயும் அஷித்குமார் என்பவர் மாணவரின் கணக்கில் 960 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்செயலாக இந்த இரண்டு மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள இருப்பு தொகையை சோதனை செய்ய சென்றபோது தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை பார்த்த இரண்டு மாணவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அந்த மாணவர்கள் வங்கி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது வங்கி அதிகாரிகள் தவறுதலாக இந்த பணம் செலுத்தப்பட்டு இருக்கும் என்றும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆதம் நகர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது பள்ளி சீருடை வாங்குவதற்காக அரசு பள்ளிகளுக்கு செலுத்தவேண்டிய பணத்தை மொத்தமாக 2 மாணவர்களின் வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தி விட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் இருவரது வங்கி கணக்கில் 960 கோடி ரூபாய் தவறுதலாக செலுத்தப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?