வேலைவாய்ப்பு

ரேசன் கடைகளில் 2000+ காலியிடங்கள் – எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லை!

Published

on

ரேசன் கடைகளில் 2000+ காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை 2024 டிசம்பர் மாதத்திற்குள் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு, அனைத்து தமிழக மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரடியாக நியமனம் செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்:

தமிழ்நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விற்பனையாளர்கள் பதவிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், கட்டுநர்கள் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதிகள் உடையவராக இருந்தால், https://drbmadurai.net என்ற இணையதளம் வழியாக 2024 நவம்பர் 17 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

விற்பனையாளர்: ரூ.150/-
கட்டுநர் (Packers): ரூ.100/-
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

எந்தவித எழுத்துத் தேர்வு இல்லாமல், விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வகுப்பு வாரியாக இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

 

Poovizhi

Trending

Exit mobile version