தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்! பிறப்பிப்பு

Published

on

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அவுட்லுக் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக விமான நிலையங்களுக்கு காவல்துறை அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூபாய் 3 கோடி வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ராஜேந்திரபாலாஜி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு அவுட்லுக் நோட்டீசை காவல்துறை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 10 தனிப்படைகள் அமைத்தும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க முடியவில்லை என்பது காவல் துறைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version