தமிழ்நாடு

கஜா புயலால் வேளாங்கண்ணி மாதா கோயில் சேதம்!

Published

on

இன்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில் சேதமடைந்துள்ளது.

கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக நாகை மாவட்டம் முழுவதும் சேதமடைந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் அங்கு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயலின் பாதிப்பால், நாகையில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயிலும் சேதமடைந்துள்ளது. மாதா கோயிலின் முன்பகுதியில் உள்ள கட்டிடங்கள் புயலில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளன. மழை, காற்று நின்ற பின்னர் அங்கு மீட்பு பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version