சினிமா செய்திகள்
முதுமலை தம்பதி குறித்த ஆவணப் படத்திற்கு ‘ஆஸ்கர்’ விருது!
முதுமலை தம்பதி குறித்த ‘The Elephant Whisperers’ என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்ற யானைக் குட்டி ரகுவை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளான பொம்மன் மற்றும் பெல்லி இருவரும் எப்படி பராமரித்தார்கள், அதனுடனான அவர்களது பாசம், அன்பு குறித்த ஆவணப்படமாக The Elephant Whisperers உருவாகி இருந்தது.
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இந்த படத்தை கார்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார்.
இந்தியாவின் முதல் ஆஸ்கர் படம் என்ற பெருமையை The Elephant Whisperers பெற்றுள்ளது.
ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்த ஆண்டு தி எலிபேண்ட் விஸ்பர்ஸ் உடன் சேர்த்து, ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் இடம்பெற்றுள்ளது.
இந்த அண்டு ஆஸ்கர் விருதுக்கு நடிகர் சூர்யாவும் வாக்களித்து உள்ளார். மேலும் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் பட்டியலில் நடிகை தீபிகா படுகோணும் இடம்பெற்றுள்ளார்.